Saturday 4th of May 2024 12:53:35 PM GMT

LANGUAGE - TAMIL
-
துமிந்தவின் விடுதலைக்கு பாரதவின் மனைவி எதிர்ப்பு!

துமிந்தவின் விடுதலைக்கு பாரதவின் மனைவி எதிர்ப்பு!


"கொலையாளியை விடுதலை செய்து, நீதியை சிறை வைத்துள்ளனர். நீதி இல்லாத நாட்டில் சூரியன் உதிக்காது." என படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஸ்மன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

பாரத லக்‌ஸ்மன் பிரேமசந்திர படுகொலை வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, ஜனாதிபதி விசேட பொதுமன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு பாரத லக்‌ஸ்மன் பிரேமசந்திரவின் மனைவி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

"மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரும், உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஐவரும் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத நாடு. ஒரு நாடு பல சட்டங்கள் உள்ளன என்பது இந்த விடுதலை மூலம் உறுதியாகியுள்ளது" எனவும் அவர் சமூக வலைத்தளத்தில் விமர்சித்துள்ளார்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE